தமிழ்நாடு, Uncategorized

திருக்குறளில் உலக சாதனை : 400 அடி நீளம் கொண்ட உலகின் நீண்ட திருக்குறள் பதிப்பு வெளியிடப்பட்டது!

DSC_0025

2015 ஆம் ஆண்டு திருவள்ளுவர் நாளை முன்னிட்டு வரலாற்றில் முதல் முறையாக உலகின் மிக நீண்ட திருக்குறள் பதிப்பு சென்னை மெரினா கடற்கரை திருவள்ளுவர் சிலை அருகே வெளியிடப்பட்டது. 133 அதிகாரங்கள் அடங்கிய 1330 திருக்குறளும் 400 அடி நீளமுள்ள நெகிழி(பிளாஸ்டிக்)ப் பதாகையில் அச்சிட்டு பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது.

திருவள்ளுவர் நாளில் திருக்குறளுக்கு பெருமை சேர்க்கும் இந்த வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வில் தமிழ் ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டு திருக்குறளுக்கு பெருமை சேர்த்துள்ளனர். தமிழ் மக்கள் வள்ளுவர் நாளை கொண்டாடும் விதமாக இனிப்புகள் பரிமாறி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இது குறித்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள்…

அடுத்தடுத்து வரும் திருவள்ளுவர் ஆண்டு தொடங்கும் நாளில் இந்த சாதனையை  முறியடிக்க தமிழ் அமைப்புகள் முயற்சி மேற்கொள்வோம். இதே போல மற்ற மாவட்டங்களிலும் உள்ள தமிழ் அமைப்புகளும் திருக்குறளின் அடிப்படையில் புதிய சாதனைகளை படைத்து திருவள்ளுவருக்கும் திருக்குறளுக்கும் பெருமை சேர்க்க வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறோம். திருவள்ளுவர் உலகிற்கு வழங்கிய திருக்குறளின் பெருமையை இந்தியாவில் உள்ள தமிழர் அல்லாதவர்களுக்கும், உலக மக்களுக்கும் சென்று சேர வேண்டும்.

இந்திய அரசு திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும். திருவள்ளுவர் பிறந்த நாளை மொழி இன சமத்துவ நாளாக அறிவிக்க வேண்டும்.  இந்தியா முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் திருக்குறள்  பாடத்திட்டத்தில் இணைக்கப்பட்டு கற்பிக்கப்படுதல் வேண்டும். திருவள்ளுவருக்கு தமிழில் நாணயங்கள் அஞ்சல் தலைகள் வெளியிட வேண்டும். பாராளுமன்றத்தில் திருவள்ளுவருக்கு சிலை வைக்க வேண்டும். இந்திய அரசு திருக்குறள் காட்டிய நெறிப்படி ஆட்சி நடத்தி வள்ளுவர் வகுத்த மொழி இன சமத்துவத்தை பேணும் மக்களாட்சியை வழங்க வேண்டும். இதை கருத்தில் வைத்தே  இச்சாதனை முயற்சியை தமிழர் பண்பாட்டு நடுவமும், தமிழ் ஆன்றோர் அவையும் இணைந்து முன்னெடுத்துள்ளன’ என்றனர்.

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.